Saturday, June 12, 2010

எழுத்தாளர் சுஜாதா

வணக்கம். வெகு நாளாக இணையதளத்தில் தமிழில் எழுத ஆசை. இன்று நிறைவேறியது . அண்மையில் எதோ பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சுஜாதாவின் ஞாபகம் வந்தது. என்ன ஒரு அருமையான எழுத்தாளர். எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும் தனக்கென்று ஒரு பாணி வைத்து இருந்தார். முதன் முதலாக "கம்ப்யுடரே ஒரு கதை சொல்லு " என்று கணினியை வெகு எளிமையாக சொல்லி கொடுத்தார் . அவரின் ஜீனியஸ் ஒரு சிறுகதையில் தெரிந்தது . கணேஷ் , வசந்த் என்று ஒரு உண்மை கதாபாத்திரமாகவே படைத்தார்.
நான் படித்த , எனக்குப் பிடித்த சில சுஜாதா புத்தகங்கள் :
நைலான் கயிறு, அனிதா, இளம் மனைவி, களைந்தபொய்கள், எதையும் ஒரு முறை - இப்படி பல.
அவருடைய தொகுப்புகளில் எனக்குப் பிடித்தது பல : விவாதங்கள், விமர்சனங்கள் - a real beauty.
அவரின் மறைவு தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு.