Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

Saturday, August 10, 2013

தலைப் பிரசவம்

அன்புடையீர்

வாழ்க்கையின் பல பரிமாணங்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னிடையே என்றும் இருக்கிறது. ஆனால் அதை  ஒரு மித்தமாக  நேர்க்காணும் தைரியம் எனக்குள் இன்னும் வரவில்லை. ஆகையால் , ஒரு குழந்தையைப் போல் ஒவ்வொரு படியாக ஏற முற்ச்சிக்கிறேன்.

இம்முயற்ச்சியில் முதல் படியாக என் வலைப்பூ(
  http://kapalicanvas.blogspot.com/)  ஆரம்பித்தேன். இது தந்த உற்ச்சாகத்தில், இதற்க்குக் கிடைத்த வரவேற்ப்பில்  தமிழிலும் எழுதத் துணிந்ததில்  என் தமிழ் வலைப்பூ (
http://chinthikkiren.blogspot.in/) மலர்ந்தது. 

எனக்குத் தோன்றும் எண்ணங்களையும், அபிப்ராயங்களையும் வலைப்பூ மட்டுமில்லாமல் சிறிது அனுபவமும் கற்பனையையும் குழைத்து ஒரு கதையாக மெருகேற்றினால் என்ன என்ற எண்ணம் தான் , என் முதல் கதைக்கு மனதளவில் வித்திட்டது. சமீப காலமாகப் படித்த பல கதைகள் என் இந்த ஆசையைத் மேலும் தூண்டி விட, விளைந்த சிறு செடி தான் , என் முதல் கதை "பரிகாரம்".

இது தமிழ் எழுத்தாளர்களை ஆதரித்து அவர்களுக்குத் தளமளிக்கும் http://www.sirukathaigal.com/. என்ற இடத்தில் என் உண்மையான  "கபாலி" என்ற பெயரில் இன்று ப்ரசுரிக்கப்பட்டுள்ளது.

காக்கைக்கும் தன் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்- என் கதை வடிவ முதல் கன்றை ஈன்றதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன்

முதலடியை எடுத்து வைத்துள்ளேன்- இன்னும் பல கல் கடக்க உள்ளேன்-  தங்கள் வாழ்த்துக்களுடன்

என்றுமே என் எண்ணங்களையும் எழுத்துக்களையும் பற்றிய உங்களின் கருத்துக்கள் என்னை உற்ச்சாகப் படுத்தியிருக்கின்றன, சிந்திக்க வைத்திருக்கின்றன. ஆகையால் தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் :