Sunday, June 17, 2012

அப்பா - அன்புள்ள அப்பா




எல்லாருக்குமே, முக்கியமாக பசங்களுக்கு முதல் ஹீரோ அப்பாதான்- இதென்னவோ ஒரு மாறாத கூற்றாக பல வருடங்களாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. பல சினிமாக்கள் பார்த்தும், இது மாறுவதில்லை, கொஞ்ச வயசு வரை- அப்பறம் இலக்கு மாறும் போது தான் திசை திரும்புகிறது. இந்த ஹீரோ ஆராதனைக்கு நானும் விதி விலக்கல்ல.

சொல்லப் போனால், என் அப்பாவின் அருமையும் பெருமையும் அவருக்குப் பின் தான் எனக்கு மேலும் தெளிவடைந்தது. என் அப்பா தன் பிள்ளைகளின் மேல் வைத்த அபார நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஒரு சம்பந்திக்கு அவரின் பதிலில் தெரிந்தது- " எனக்கு வீடு வாசல் எல்லாம் கிடையாது. என் மூன்று பிள்ளைகளும் தான் என் சொத்து".

அவரைப்பற்றி என்னுடைய உடனுக்குடனான க்யாபகங்கள் சில:

·         வெள்ளைக்காரன் கம்பெனியில் இருந்ததாலோ என்னவோ, அவரின் உடைகள் அபாரம். அந்தக் காலத்திலேயே 4 ஜதை ஷூ வைத்திருந்தார் !
·         நேரம் தவறாமை, கண்டிப்பாக , அந்த ஜீன்சிலிருந்து தான் (கோபமும் அதே என்று குரல் கேட்கிறது)
·         நியூ காலேஜ் சேர்மன் வீட்டு வாசலில் அடம் பிடித்து என் அண்ணனுக்கு இடம் வாங்கியது.
·         எந்த சவாலையும் சமாளிக்க கற்றுக் கொடுத்தது அவர் தான். துணை வேந்தர் அளவுக்குச் சென்று என் அண்ணனுக்கு இடம் வாங்கி, அவரும், முதல் ராங்க் வந்து- முயற்ச்சிக்கு அழகு கூட்டினார்.
·         ஆங்கிலத்தில் எந்த சந்தேகங்களுக்கும் உள்ள ரெடி மேட் கய்டு அவர்- ஆனால் அவர் படித்ததென்னவோ அந்த கால ப்ளஸ் டூ தான் !!
·         என் அண்ணனின் ஷேக்ஸ்பியர் பாடத்துக்கு உதவி பண்ணியது.
·         72 வயதிலும் , எதையும் பொருட்படுத்தாமல் மகடி, திப்பசன்றா போன்ற கல் மலைகளை அனாயசமாக ஏறியது- துணக்கு ஒரு உப்புக்கு சப்பாணியாக நான் !
·         என்னை பெங்களூர் வீதியில் கை பிடித்து கூட்டிச் சென்றது.
·         எனக்குப் சென்னை பாரிசில் ராமகிருஷ்ணா பவனில் மசாலா தோசை வாங்கிக் கொடுத்தது,
·         இரவில் எப்ப எழுந்து வந்தாலும், ஏதாவது திங்கக் கொடுப்பார்.
·         கடைசி வரை தன் நிலையை எதற்க்கும் விட்டுக்கொடுக்காதவர்.
·         அறுபதுகளில் கப்பல் போன்ற ஸ்டுடிபேகர் கார் வைத்திருந்தார்.
·         திடீரென்று எல்லா பிள்ளைகளையும் கூப்பிட்டு கொஞ்சம் பணம் கொடுத்து , இது தான் நான் உங்களுக்காக சேர்த்தது என்று எங்கள் எல்லோரையும் அசர வைத்தது. அன்றைய வருடத்தில் அது பெரிய பணம் (விஷயம்)
·         கடைசி வரையில் எல்லோரையும் கூட்டுக் குடும்பத்திலேயே இருக்க வைத்து, பிற்கால உறவுக்கு ஒரு பெரிய அஸ்திவாரம் போட்டது.

இந்த மாதிரி ஒரு அப்பாவாக நான் இருந்தால் போதும் !!

6 comments:

  1. Really a good one sir..!! I njoyed reading it very much..

    ReplyDelete
  2. One thing I have always admired in your family is the family set-up, one-to-one affection and communication among all brothers and sisters much against the very concept of nuclear (small and tiny) family of these days. Kudos to your father (and certainly your mother too) for having imbibed the spirit in all of you! Drusti sutthi podu!

    ReplyDelete
  3. Niranjan Shanmughanathan wrote on 17-Jun-2012:

    I loved o read this...

    ReplyDelete
  4. Akhiladevi Kumaran wrote on 18-Jun-2012:

    Excellent post..Was enjoying every line of it.

    ReplyDelete
  5. Jaishree Chandrasekar wrote on 17-Jun-2012: Nice post,Kapali! I liked 2 of them a lot: 72 வயதிலும் , எதையும் பொருட்படுத்தாமல் மகடி, திப்பசன்றா போன்ற கல் மலைகளை அனாயசமாக ஏறியது- துணக்கு ஒரு உப்புக்கு சப்பாணியாக நான். And, அறுபதுகளில் கப்பல் போன்ற ஸ்டுடிபேகர் கார் வைத்திருந்தார்"

    ReplyDelete
  6. natarajan_tm@yahoo.co.uk wrote on 17-Jun-2012:

    "Super Sir ! Proud Father and Proud Son ..."

    ReplyDelete