Saturday, August 10, 2013

தலைப் பிரசவம்

அன்புடையீர்

வாழ்க்கையின் பல பரிமாணங்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னிடையே என்றும் இருக்கிறது. ஆனால் அதை  ஒரு மித்தமாக  நேர்க்காணும் தைரியம் எனக்குள் இன்னும் வரவில்லை. ஆகையால் , ஒரு குழந்தையைப் போல் ஒவ்வொரு படியாக ஏற முற்ச்சிக்கிறேன்.

இம்முயற்ச்சியில் முதல் படியாக என் வலைப்பூ(
  http://kapalicanvas.blogspot.com/)  ஆரம்பித்தேன். இது தந்த உற்ச்சாகத்தில், இதற்க்குக் கிடைத்த வரவேற்ப்பில்  தமிழிலும் எழுதத் துணிந்ததில்  என் தமிழ் வலைப்பூ (
http://chinthikkiren.blogspot.in/) மலர்ந்தது. 

எனக்குத் தோன்றும் எண்ணங்களையும், அபிப்ராயங்களையும் வலைப்பூ மட்டுமில்லாமல் சிறிது அனுபவமும் கற்பனையையும் குழைத்து ஒரு கதையாக மெருகேற்றினால் என்ன என்ற எண்ணம் தான் , என் முதல் கதைக்கு மனதளவில் வித்திட்டது. சமீப காலமாகப் படித்த பல கதைகள் என் இந்த ஆசையைத் மேலும் தூண்டி விட, விளைந்த சிறு செடி தான் , என் முதல் கதை "பரிகாரம்".

இது தமிழ் எழுத்தாளர்களை ஆதரித்து அவர்களுக்குத் தளமளிக்கும் http://www.sirukathaigal.com/. என்ற இடத்தில் என் உண்மையான  "கபாலி" என்ற பெயரில் இன்று ப்ரசுரிக்கப்பட்டுள்ளது.

காக்கைக்கும் தன் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்- என் கதை வடிவ முதல் கன்றை ஈன்றதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன்

முதலடியை எடுத்து வைத்துள்ளேன்- இன்னும் பல கல் கடக்க உள்ளேன்-  தங்கள் வாழ்த்துக்களுடன்

என்றுமே என் எண்ணங்களையும் எழுத்துக்களையும் பற்றிய உங்களின் கருத்துக்கள் என்னை உற்ச்சாகப் படுத்தியிருக்கின்றன, சிந்திக்க வைத்திருக்கின்றன. ஆகையால் தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் :    


No comments:

Post a Comment