Wednesday, March 28, 2012

எங்கே போச்சு ?


காலையில்  வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் பாரதியும், ராஜாவும் பழைய நினைவுகளை நன்றாக கிளரிவிட்டார்கள்அந்தக் காலத்தில் இருந்த எந்தெந்த  மனிதர்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் தொலைந்து போயிருக்குன்னு.

அனேகமாக எல்லோருக்கும், குறிப்பாக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த எல்லாப் பசங்களுக்கும் இதில் ஏதேனும் கொஞ்சமானும் அனுபவித்திருப்பார்கள்

அப்படி இல்லன்னா உடனே தயவு செய்து இங்கிருந்து விலகவும். நீங்கள் இன்னும் பிள்ளைப் பிராயமே தாண்டவில்லை. அதற்குள் எதுக்கு ப்ளாக் எல்லாம்? 

மாடும், பால்காரரும்
சாணை பிடிப்பவர்கள் 
ரோட்டில் உருளும் கோவிந்தா
தயிர் சட்டிகள்
அம்மி, ஆட்டுக்கல் 
ஈயம் பூசுபவர்கள்
சாட்டையால் அடித்துக் கொள்பவர்கள்
பூம் பூம் மாடு
குரங்காட்டிகள்
கிளி ஜோசியக்காரர்கள்
ஸ்லேட்டு, பல்ப்பம்
ரோட்டில் பம்பரம், கில்லி, கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்

ஆகர் விழாத பம்பரம், ஜாட்டி
தாவணிகள் (வெட்கத்துடன்


ரேடியோவில் திரைகானம், விவித பாரதி
மொக்கு மாவு 
பெருத்த ஓசை எழுப்பும் மாவு மிசின்கள் 
கறிகாய் கடைகளில் பேசும் பேரம்
பட்சணக் கடைகளில் கேட்காமலே கிடைக்கும் தூள் பக்கோடா
கொஞ்சம் கருகப்பிலை , கொத்து மல்லி 
அரையணா பட்டணம் பொடி
பத்து பைசாக்கு ராஜகுமாரி வரைக்கும் பஸ் டிக்கட் 
ஸ்கூல் வாசல் மாங்கா பத்தை , இலந்தப் பழம் வகையறா 
முதல் ரோ சினிமா , கமர்கட், குச்சி ஐஸ் 
வாத்தியாரிடம் உள்ளங்கையில்  பிரம்படி, அடி படாட்டாலும் வலிக்கற மாதிரியே நடித்தது  -  (இப்பல்லாம் வாத்திய தூக்கி உள்ளே வச்சுருவாங்கள்ளே) 
ரேடியோ கமெண்டரி 
அரை டிராயர் யூனிபார்ம் 
ஓட்டைக் காலணா 
காப்பிக் கொட்டை  மிசின் 
தீபாவளி, பொங்கல் வாழ்த்து அட்டைகள் 
சைக்கிளின் எண்ணை விளக்கு
திங்கள் காலை அவசர அயர்னிங் 
சைக்கிள் டபுள்ஸ் - போலிஸ் தொப்பியைக் கண்டதும் குதிப்பது 
மாசக் கடைசியில் அம்மாகிட்டே எட்டணா ( "அப்பா கிட்ட சொல்லாதே"

எல்லாத்தையும் ஒரு வாட்டி படிச்சுப் பாத்தா , சாலமன் பாப்பையா குரல் கேக்கல ?  " நல்லத்தாம்பா இருந்தது

2 comments:

  1. More things lost: peaceful faces, people without greed, teachers genuinely interested in students, film songs with meaning, filling ink to your pen for 3 paise etc etc

    ReplyDelete
  2. Very true, Murali. We can add a lot, but all that kindles is some sweet memories!

    ReplyDelete